பலன் தரும் ஸ்லோகம் : (ஏழ்மை விலக, சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட...)

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

ஸ்ரீவேங்கடாசலதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்

ஸ்ரீரிநிகேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே.

ஸ்ரீ ஸ்ரீநிவாச மங்கள ஸ்லோகம்.

பொதுப் பொருள்:

திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீயப்பதியான ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே, நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா நமஸ்காரம்.

(வைகுண்ட ஏகாதசியன்று (18:12:2018) இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.)

Related Stories: