நாகர்கோவில்: காரவிளை ஸ்ரீகார்த்திகேயன் காவடிக்கட்டு கமிட்டி நடத்தும் வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கான 6வது ஆண்டு காவடி பவனி திருவிழா கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 7ம் தேதி இரவு 7.30 மணிக்கு பஜனை, 8 மணிக்கு வேல்பூஜை, 8.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதுபோல் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தினமும் காலை 9.15 மணிக்கு காவடியை பூஜையில் அமர்த்துதல், 9.30 மணிக்கு காவடிபூஜை, 10 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு பஜனை, 9 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 7 மணிக்கு காவடி பூஜை, மாலை 7 மணிக்கு நையாண்டி மேளம், இரவு 7.45 மணிக்கு அன்னதானம், 8 மணிக்கு காவடி பூஜை, காவடி பாட்டு, இடும்பன் எழுந்தருளல் ஆகியவை நடந்தன.