கல்கத்தாவைக் காளி எப்படி தன் சொந்த இடமாக்கிக் கொண்டாளோ அதேபோல் மகாலட்சுமி பம்பாயைத் தன் சொந்த இடமாக்கிக் கொண்டிருக்கிறாள். மகாராஷ்டிரத்தில் கோலாப்பூரிலுள்ள மகாலட்சுமி கோயில் மிகப்பிரசித்தி பெற்றது. இது ஒரு சக்தி பீடம் கோலாப்பூரில் தனிக்கோயில் கொண்டிருந்தாலும் நிறைந்த புகழுடன் மிக்க அருளுடனும் அவள் வாழ்வது மும்பையில்தான். மகாலட்சுமி ஆலயம் ஒரு பங்களா மாதிரி காட்சி அளிக்கிறது. மூன்று முகமுள்ள தேவியைக் காணலாம். நடுவிலுள்ள முகம் காலட்சுமியுடையது. ஒரு பக்கம் காளியின் முகமும், மற்றொரு பக்கம் சரஸ்வதியின் முகமும் காணப்படுகிறது. முகத்தைத் தவிர மற்ற பாகங்களைத் துணியால் மறைத்திருக்கிறார்கள்.