நெல்லை: பாளை. திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நேற்றிரவு 151 திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாள், மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் கோமதி அம்பாள் சன்னதியில், 151 திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சோமவார பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளை செய்திருந்தது.