ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டிசேலம் மெயின்ரோட்டில் ஓம்சக்தி விநாயகர் கோயில் வளாகத்தில், ஐயப்பன் கோயில் உள்ளது. நேற்று இந்த கோயிலில் 32வது ஆண்டாக குருபூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு பழனிசாமி, அண்ணாதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் 18ம் படி பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.