சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று கார்த்திகை சோமவாரம் தொடங்கியது. கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் சோமவாரமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலையிலேயே நீராடி தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விரதமிருந்து நடராஜர் கோயிலில் சித்சபையை 108 முறை வலம் வருவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெண்கள் சோமவாரம் விரதம் கடைபிடிப்பது வழக்கம்.