அம்பிகை அபீத குஜாம்பாள் எனும் உண்ணாமுலையம்மனாக திருவருட்பாலிக்கும் தலம் திருவண்ணாமலை. தலமரமாக மகிழமரமும், தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தங்களும் உள்ளன. இங்கு ஆடிப்பூரம் அன்று தீமிதி திருவிழா அம்மன் சந்நதி முன்பாக நடக்கும். பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்று தான் பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார் என்பதால் அன்றைய தினம் திருவண்ணாமலையை கிரிவலம் வருதல் சிறப்பு.