கொடைக்கானலில் மறைபரப்பு ஞாயிறு திருவிழா

கொடைக்கானல்: கொடைக்கானலில் நடந்த மறைபரப்பு ஞாயிறு திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடைக்கானல் மூஞ்சிக்கல் திருஇருதய ஆண்டவர் தேவாலயத்தில் மறைபரப்பு ஞாயிறு திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் போதனைகளை உலகெங்கும் பறைசாற்றுவதற்காக பாதிரியார்கள், சகோதரிகள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் இவ்விழா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உணவுத்திருவிழா, விளையாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி அதன்மூலம் சேகரித்த பொருட்களை மிகவும் பின்தங்கிய பகுதிகளில் பணி செய்யும் பாதிரியார்கள், சகோதரிகளுக்கு அனுப்புவர். அதன்படி இங்கு நிகழ்ச்சிகள் நடத்தி சேகரித்த பொருட்களை மறைமாவட்டம் முழுவதும் அனுப்பி வைத்தனர்.

Related Stories: