திருவண்ணாமலை: .திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்தனர். அதைத்தொடர்ந்து, இரவு 9 மணியளவில் அளவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில் வாண வேடிக்கையுடன் இரவு உற்சவ புறப்பாடு நடந்தது. அப்போது, அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளை தரிசித்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என பக்தி முழக்கமிட்டனர்.