பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் மனவாளமாமுனியின் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு சுவாமி வீதிஉலா நடந்தது. பள்ளிகொண்டாவில் புகழ்பெற்ற உத்திர ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் மனவாளமாமுனியின் நட்சத்திரத்தை முன்னிட்டு சாற்று முறை உற்சவம் நடைபெற்றது. காலையும், மாலையும் உற்சவருக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.