ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மகா கந்தசஷ்டி பெருவிழா துவக்கம்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மகாசஷ்டி பெருவிழா நேற்று துவங்கியது. ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி பெருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே போல் முதல் நாளான நேற்று  காலை சுப்பிரமணிய திரிசதி அர்ச்சனையும், மூலமந்திர ேஹாமம். மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.

வெள்ளிக் கவசத்தில் வள்ளி தெய்வயானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை ஓம்கார அலங்காரம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், செயல்அலுவலர் மு.சிவஞானம் செய்திருந்தனர்.

Related Stories: