போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த கோடிப்புதூர் பத்ரகாளியம்மனுக்கு நாணயம், ரூபாய் நோட்டு படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. போச்சம்பள்ளி அருகே கோடிப்புதூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம், இந்த கோயில் முன் பரண் அமைத்து பன்றியை பலியிட்டு நடத்தப்படும் வழிபாடு பிரசித்தி பெற்றது. இந்நிலையில், கேதார கவுரி விரதத்தையொட்டி, கோடிப்புதூர் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.