ஸ்ரீ முத்துமாாியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி ஊஞ்சல் தாலாட்டு

வந்தவாசி: வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. வந்தவாசி அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 18 கைகளுடன், 81 அடி உயரம் கொண்ட ஸ்ரீஆதிசக்தி சர்வமங்களகாளி அம்மன் கோயில் உள்ளது.  இங்கு ஐப்பசி மாத அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி விஷ்ணு துர்கை அலங்காரத்தில்    பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  மேலும், தோஷம் நிவர்த்திக்கான ஸ்ரீசங்கர மஹாவேள்வி பூஜை நடத்தி பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு முத்துமாரியம்மன் பூஷ்ப அலங்காரத்தில் ஊஞ்சல் தாலாட்டு, முக்கிய வீதிகள் வழியாக  அம்மன் வீதி உலா நடந்தது.  இதில் பல்வேறு நகரங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: