மன்னார்குடி: மன்னார்குடி அருகே வடுவூர் கோதண்ட ராமசாமி கோயிலில் தேசிகர் ஜெயந்தியையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. வைணவ ஆச்சாரியர்களில் குறிப்பிடத் தக்கவரான நிகமாந்த மகாதேசிகன் சுவாமியின் 750வது ஆண்டு ஜெயந்தி விழா வடுவூர் கோதண்டராமசாமி கோயிலில் கடந்த 10 தினங்களாக நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரில் நிகமாந்த மகாதேசிகன் சுவாமியை எழுந்தருள செய்து தீப ஆரத்தி செய்தனர். அதன் பின்னர் தீட்சிதர்கள் வேதபாராயணம் படித்தனர். பின்னர் வீதி உலா நடத்தப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக ரதத்தில் வலம் வந்த நிகமாந்த மகா தேசிகன் சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிறைவாக சுவாமிக்கு தீர்த்தவாரியும் நடத்தப்பட்டது.