ஜப்பானிய இயக்குனரின் கடைசி படம் விரைவில் இந்தியாவில் வெளியாகிறது

டோக்கியோ: உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் ஹயாவோ மியாசாகி இயக்கத்தில் வெளியான படம், ‘த பாய் அன்ட் த ஹெரான்’. இந்த ஆண்டுக்கான சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருது வென்ற இந்தப்படம், ஹயாவோ மியாசாகி இயக்கிய 12வது படம் என்றும், இதுவே அவர் இயக்கும் கடைசி படம் என்றும் தகவல் வெளியாகி யுள்ளது. இதர நாடுகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான இப்படம், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்தியாவில் வெளியாகவில்லை. இந்நிலையில், 9 மாத இடைவெளிக்குப் பிறகு இப்படம் இந்தியாவில் ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிடப்படுகிறது. ரிலீஸ் தேதி முடிவாகவில்லை. இந்தியாவில் வார்னர் பிரதர்ஸ் வெளியிடுகிறது.

The post ஜப்பானிய இயக்குனரின் கடைசி படம் விரைவில் இந்தியாவில் வெளியாகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: