தென்காசி: தென்காசி பொருந்தி நின்ற பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சத்யநாராயண பூஜை வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தென்காசி ஆனைப்பாலம் அருகில் உள்ள பொருந்தி நின்ற பெருமாள் கோயிலில் மாதம் தோறும் பவுர்ணமி தினத்தன்று தென்காசி நகர இந்து முன்னணி மற்றும் இந்து ஆட்டோ ஓட்டுனர் முன்னணி சங்கம் சார்பில் சத்யநாராயண பூஜை வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த மாதம் சத்யநாராயண பூஜை நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலையில் பொருந்தி நின்ற பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.