சீனியர்களுடன் நடிக்கும்போது பதற்றமாக இருந்தது: சொல்கிறார் மிருணாளினி ரவி

சென்னை: விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘ரோமியோ’ படத்தில் நடித்துள்ளார், மிருணாளினி ரவி. அவர் கூறுகையில், ‘சில கேரக்டர்கள் நடிப்பதற்கு எளிதாகவும், அதே நேரத்தில் மிகப்பெரிய சவாலாகவும் இருக்கும். இப்படத்தில் எனது கேரக்டர் அதுபோல் அமைந்துள்ளது. என் நிஜ கேரக்டர், இப்படத்தின் கேரக்டருக்கு அப்படியே மாறுபட்டது.

பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் பொழுதுபோக்கான அனுபவத்தை ‘ரோமியோ’ படம் கண்டிப்பாக கொடுக்கும். விஜய் ஆண்டனியுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். ‘தலைவாசல்’ விஜய், விடிவி கணேஷ், யோகி பாபு போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் சேர்ந்து பணியாற்றப் போகிறேன் என்பதை நினைத்து முதலில் பதற்றமாக இருந்தது. பிறகு அது சரியாகிவிட்டது. அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்’ என்றார்.

The post சீனியர்களுடன் நடிக்கும்போது பதற்றமாக இருந்தது: சொல்கிறார் மிருணாளினி ரவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: