எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி

சென்னை, ஏப்.11: மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய்க்கு தீவிர சிகிச்சை பெற்று உடல்நிலை தேறியுள்ள சமந்தா, தற்போது ‘சிட்டாடல்’ என்ற இந்தி வெப்தொடரில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் புதுப்பட வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக எனது உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. எனது தசைகள் பயங்கர வலியை ஏற்படுத்தியது. எலும்புகள் பலவீனம் அடைந்ததால் மிகவும் சோர்வடைந்தேன். சில நாட்கள் படுக்கையில் இருந்து எழுந்து செல்ல சிரமமாக இருந்தது. மேலும், கடுமையான ஒற்றைத்தலைவலி ஏற்பட்டது.

இதனால், என்னால் எந்த செயலையும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்ய முடி யாமல் அவதிப்பட்டேன். தற்போது எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன். அதனால் அதிக மகிழ்ச்சியுடன் காணப்படுகிறேன். என்னை ஒரு புதிய மனுஷி போல் உணர்கிறேன். தினமும் அதிகாலை 5.30 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்துகொள்கிறேன். பிறகு சூரிய உதயத்தைப் பார்த்தபடி சில நிமிடங்கள் நிற்பேன். இதையடுத்து மூச்சு பயிற்சியில் ஈடுபடுவேன். தொடர்ந்து 25 நிமிடங்கள் தியானம் செய்வேன். அன்றைய பணிகளை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் தொடங்க இதன் மூலமாக எனக்கு அளவிட முடியாத சக்தி கிடைக்கிறது.

The post எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: