×

புரட்டாசி முதல் ஞாயிறையொட்டி சிவசூரியபெருமான் கோயிலில் சிறப்பு ஹோமம்

திருவிடைமருதூர்: திருப்பனந்தாள் அருகே நவக்கிரக கோயில்களில் ஒன்றான சிவசூரியபெருமான் கோயிலில் புரட்டாசி முதல் ஞாயிறையொட்டி சிறப்பு ஹோமம் நடந்தது. திருவிடைமருதூர் தாலுகா கும்பகோணம் அடுத்த திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியப் பெருமான் கோயில் சூரியனார்கோயிலில் உள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் மாதந்தோரும் தமிழ் மாதமான முதல் ஞாயிற்றுகிழமையன்று சிறப்பு சிறப்புஹோமம் நடைபெறும். அதேபோல் நேற்று  புரட்டாசி மாதமான முதல்ஞாயிற்றுகிழமை என்பதால் மழைமும்மாறி பெய்து தண்ணீர் பெறுக்கெடுத்து  விவசாயம் செழிக்க வேண்டு என சிறப்பு ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி, தீபாதாரணை நடைபெற்றது.

தொடர்ந்து மேலதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடந்து கோயிலின் நடைமண்டபத்தில் எழுந்தருளிய உர்ச்சவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு தீபாதாரணைகள் நடைபெற்றது. அதே நேரத்தில் நவக்கிரக நாயகர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?