சீர்காழி: சீர்காழி அருகே நாங்கூரில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான பள்ளிக்கொண்ட பெருமாள் கோயிலில் பிரமோற்சவ உற்சவத்தை முன்னிட்டு 2ம் நாள் விழாவில் பள்ளிக்கொண்ட பெருமாள் யாளி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்பு சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.