தேவையான பொருட்கள்
வாழைப்பூ, (ஆய்ந்து சுத்தம் செய்து, நறுக்கியது) - 1 1/2 கப்
கடலைப் பருப்பு - 3/4 கப்
உளுத்தம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
அரிசி - 2 மேஜைக்கரண்டி
வெங்காயம், நறுக்கியது - 1/4 கப்
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் - 4
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு கொத்தமல்லி, (நறுக்கியது) 3 மேஜைக் கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் பொரிக்க.
செய்முறை:
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை ஒன்றாக ஊற வைத்துக்கொள்ளவும். 3 மணி நேரம் கழித்து, தண்ணீரை வடித்துவிடவும். முதலில் மிக்சியில் மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பொடி செய்யவும். பிறகு, ஊறவைத்த பருப்பை தண்ணீர் சேர்க்காமல் சேர்த்து, இரண்டு பாகமாக பிரித்து அரைக்கவும். மசால் வடைக்கு அரைப்பதை விட சற்று நைசாக இருக்கலாம். பிறகு அரிந்த வாழைப்பூவையும் தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில், அரைத்த பருப்பு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, பிசையவும். கைகளை தண்ணீரில் நனைத்து, ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டையை, மொத்தமாக வடையாக தட்டவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, சூடான எண்ணெயில் கவனமாக போடவும். 45 வடை வரை ஒரே சமயத்தில் பொரிக்கலாம். ஒரு பக்கம் சிவந்ததும், பிரட்டி, இன்னொரு பக்கம் பொன்னிறமாகும் வரை, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.