×

சாத்தான்குளம் அருகே கோயில் கால்நாட்டு விழா

சாத்தான்குளம்: பூவுடையார்புரம் முத்தாரம்மன் கோயில் கொடைவிழா செப்.23ம்தேதி தொடங்கி 27ம்தேதி வரை 5 நாள்கள் நடக்கிறது. இதையொட்டி  கோயிலில் கால்நாட்டு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு கோயில் தர்மகர்த்தா ஆதிலிங்கராஜ் தலைமை  வகித்தார்.  கோயிலில் முத்தாரம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்புஅபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.  தொடர்ந்து  கோயிலில் கால் நடப்பட்டது. பூஜைகளை பூசாரி செல்வன் நடத்தினார். விழாவில் மாவட்ட இந்து முன்னணி பொது  செயலாளர் சக்திவேலன், மாவட்ட பாஜக துணை தலைவர் செல்வராஜ், மற்றும் கோயில் நிர்வாகிகள் முருகன், கந்தசாமி, பொன்சண்முகவேல், வெங்கடேஷ், தனசிங், பட்டு, முருகராஜ், பால்துரை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?