அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே சின்ன ஊர்சேரியில் ஜோதிசெட்டி கருப்புச்சாமி கோயில் திருவிழா நடந்தது. கடந்த 3 நாட்களாக நடந்த விழாவில் ஹோமம், கோபூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும் முளைப்பாரி, சக்திகிடாய் வெட்டுதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்தினர். இதில் முக்கிய நிகழ்ச்சியாக பாரம்பரிய வழக்கப்படி பெரியாற்றங்கரையில் இருந்து மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் சக்திகரகம் எடுத்து வரப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், கிராம மரியாதைகாரர்கள், பூசாரிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.