பெரணமல்லூர்: பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நேற்று நடைபெற்ற சுவாமி திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரணமல்லூர் அருகே ஆவணியாபுரம் கிராமத்தில் பழமைவாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. இங்குள்ள சீனுவாச பெருமாள் சன்னதியில் கடந்த 13ம் தேதி புரட்டாசி பிரமோற்சவ கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தினசரி மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனையும், இரவில் பல்வேறு அலங்காரத்தில் உற்சவர் சீனிவாச பெருமாள் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.