திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முதல் தேவபிரசன்ன பரிகார பூஜைகள் தொடங்கியது. புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நேற்று முதல் புரட்டாசி மாத பூஜைகள் தெடங்கியது. மழை வெள்ளத்தால் பம்பையில் சேதம் ஏற்பட்டிருந்ததால் ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே கிடந்த சில மாதங்களுக்கு முன் பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி நடந்த ஆறாட்டு ஊர்வலத்தின் போது யானை மிரண்டு ஓடியது. இதில் யானை மீது இருந்த பூஜாரி கீழே விழுந்து காயமடைந்தார். ஐயப்ப விக்ரகமும் கீழே விழுந்து சேதமடைந்தது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் தேவசபிரசன்னம் நடத்தப்பட்டது.