திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை மோகினி அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வந்தார். இரவு கருடசேவை உற்சவம் நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான நேற்றிரவு சர்வ பூபாள வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். பாற்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி எனும் பாம்பை கொண்டு தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்தனர். அப்போது கிடைத்த அமிர்தம் அசுரர்களிடம் இருந்து தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு மோகினி அலங்காரத்தில் தோன்றி அமிர்தத்தை தேவர்களுக்கு கிடைக்க செய்தார்.