சாப விமோசனத்தால் கிடைத்த நன்மை அவுரவ முனிவரின் மகள் சமி என்பவள் சமி என்பவளின் கணவன் மந்தாரன். ஒரு முறை புருசுண்டி முனிவரை கண்ட சமியும். அவளது கணவரும், முனிவரைப் பற்றி ஏளனமாகப் பேசி சிரித்தனர். கோபமுற்ற புருசுண்டி முனிவர், கணவன் மனைவி இருவருக்கும் சாபமிட்டார். அதன்படி மந்தாரமாகவும், வன்னி மரமாகவும் இருவரும் மாறிவிட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து விநாயகரை வேண்டினர். இருவருக்கும் சாப விமோசனம் கிடைத்தது. விநாயகப் பெருமானின் வழிபாட்டுக்குரிய வன்னிய மர இலையாகவும், மந்தார மலராகவும் மாறினார்கள்.