×

வல்லபி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் சுப்பிரமணியன் தெருவில் எழுந்தருளி வரும் வல்லபி மாரியம்மன் கோயிலில் 70ம் ஆண்டு தீமிதி உற்சவம் கடந்த 13ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்பாள் விதியுலா நிகழ்ச்சியும், காத்தவராயசுவாமி கதை கூறுதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் அம்பாள் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று முக்கிய உற்சவமான தேர் உற்சவம் நடந்தது. நேற்று பகல் 2 மணியளவில்  அம்பாள் தேரில் எழுந்தருளினார். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. இன்று (23ம்தேதி) முக்கிய உற்சவமான தீமிதி உற்சவம் நடக்கிறது. 

Tags :
× RELATED சுந்தர வேடம்