×

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோயிலில் ஆனி பெருந்திருவிழா துவக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோயிலில் நேற்று ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதுக்கோட்டை கீழராஜவீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலையில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ளது. விழாநாட்களில் தினமும் அம்மன் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும், சுவாமி அம்மன் வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது. ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்