×

ஏற்காடு புத்தூர் கிராமத்தில் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

ஏற்காடு: ஏற்காடு புத்தூர் கிராமத்தில் பெருமாள் மற்றும் ராமர், மணியப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஏற்காடு, கே.புத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட இளையராமர், சேர்வராய பெருமாள், மணியப்பன் கோயில் கும்பாபிஷேக நேற்று நடந்தது. காலை 7 மணியளவில் 4ம் கால யாக பூஜை நிறைவு பெற்று, கலசங்கள் கோபுரத்தில் பொருத்தப்பட்டு, புனித நீர் ஊற்றப்பட்டது.

பின்னர், சுவாமி சிலைகள் அலங்கரித்து பாலாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏற்காடு எம்எல்ஏ சித்ரா மற்றும் ஏற்காடு யூனியன் முன்னாள் சேர்மன் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஏற்காடு மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி