×

ஆனி மாத முதல் ஞாயிறு : ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

நாமக்கல்: ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று  சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோயில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, ஆஞ்சநேயருக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பால், தயிர், எண்ணெய், பஞ்சாமிர்தம் மற்றும் மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமிதரிசனம் செய்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில், கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?