×

விடிய விடிய திறந்துள்ள கோயில்

விருதுநகர்: விருதுநகர் மதுரை மாவட்ட எல்லையில் உள்ள ‘சுப்புலாபுரம்’ அருகே உள்ள சிலார்பட்டி காலதேவி அம்மன் கோயில் கால நேரத்தை சிறப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரமிடு வடிவில் குடிசை போட்டு அமைக்கப்பட்டுள்ள இங்கு காலத்தை நிர்ணயிக்கும் காலதேவி அம்மன் பீடம் ஜோதி வடிவாக இருக்கிறது.

மற்ற கோயில்களைப் போல் இல்லாமல் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகே கோயில் திறக்கப்பட்டு விடிய, விடிய பிரார்த்தனைகள் யாக பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு வந்து தரிசனம் செய்தால் ஏழரை நாட்டு சனி, அஷ்டமத்து சனி, வக்கிர சனி, கண்ட சனி, ஜென்ம சனி ஆகியவற்றுடன் உக்கிரம் குறைவதாக பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!