×

கொடியேற்றத்துடன் சுவர்ண புரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா துவக்கம்

நாகை: கொடியேற்றத்துடன் சுவர்ண புரீஸ்வரர் கோயிலில் வைகாச விசாகம் பெருவிழா துவங்கியது. நாகை ஒன்றியம் தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தில் குபேரன், பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட பழமை வாய்ந்த சுவர்ண புரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர் அம்பாள், விநாயகர், சண்டிகேஸ்வரர் பாலசுப்பிரமணியர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில கொடிமரத்திற்கு எழுந்தருளினர்.

பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க திருக்கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டு மஹாதீபாராதனைகள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருக்கல்யாணமும் வருகிற 24ம் தேதியும், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வருகிற 28ம் தேதியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags :
× RELATED பார்த்தசாரதி! அவன் பாதமே கதி!!