பீட்சா 4ம் பாகம் உருவாகிறது: தயாரிப்பாளர் தகவல்

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்திருந்த படம், ‘பீட்சா’. திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்தார். 2012ல் வெளியான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்த ஆண்டில் இப்படத்தின் 2வது பாகம், ‘பீட்சா 2: தி வில்லா’ என்ற பெயரில் வெளியானது. இதில் அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி நடித்தனர். தீபன் சக்ரவர்த்தி இயக்கினார். சமீபத்தில் ‘பீட்சா 3: தி மம்மி’ படம் வெளியானது. இதில் அஸ்வின் காக்குமனு, பவித்ரா மாரிமுத்து நடித்தனர். மோகன் கோவிந்த் இயக்கினார். இந்நிலையில், ‘பீட்சா’ 4ம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று சி.வி.குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் தயாரித்த ‘பீட்சா’ படத்தின் 3 பாகங்களுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், ‘பீட்சா’ படத்தின் 4ம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்றார்.

The post பீட்சா 4ம் பாகம் உருவாகிறது: தயாரிப்பாளர் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: