ஜி.வி..பிரகாஷின் ‘டியர்’ படப்பிடிப்பு முடிவடைந்தது

சென்னை: இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம், ‘டியர்’. வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி இணைந்து தயாரித்துள்ளனர். ‘செத்தும் ஆயிரம் பொன்’ என்ற படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். சென்னை, இடுக்கி, குன்னூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

முக்கிய வேடங்களில் காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், பிளாக்‌ஷீப் நந்தினி நடித்துள்ளனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ‘ராப்’ ஐகான் அறிவு ஒரு பாடல் எழுதியுள்ளார். ரிலீஸ் தேதி முடிவாகவில்லை.

The post ஜி.வி..பிரகாஷின் ‘டியர்’ படப்பிடிப்பு முடிவடைந்தது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: