‘அநீதி’ திரைப்படத்தை பாராட்டிய ஷங்கர்

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து இயக்குனரானவர், வசந்தபாலன். தற்போது தமிழில் ‘அநீதி’, தெலுங்கில் ‘பிளட் அன்ட் சாக்லெட்’ ஆகிய படங்களை இயக்கி, அவற்றை வரும் 21ம் தேதி தியேட்டருக்கு கொண்டு வருகிறார். இதை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஷங்கர், ‘இப்படத்தை சமீபத்தில் பார்த்தேன், ரசித்தேன். கதையை யதார்த்தமாகவும், விறுவிறுப்பாகவும் வசந்தபாலன் எடுத்துச் சென்றிருக்கிறார். உழைக்கும் வர்க்கத்தின் குரலாக ‘அநீதி’ படம் ஓங்கி ஒலிக்கிறது. தொழிலாளிகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை வசந்தபாலன் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்.

தொழிலாளர்கள் மட்டுமின்றி முதலாளிகளும் இப்படத்தை தியேட்டர்களில் கட்டாயம் பார்க்க வேண்டும். அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், காளி வெங்கட் உள்பட அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இப்படத்தை தயாரித்துள்ள அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோவுக்கு எனது வாழ்த்துகள். தரமான படத்தை வணிகரீதியாகவும் வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்றியுள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷின் இசை மிகப்பெரிய பலமாக இருக்கிறது’ என்றார்.

The post ‘அநீதி’ திரைப்படத்தை பாராட்டிய ஷங்கர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: