லியோ ஷூட்டிங்கை முடித்தார் விஜய்

சென்னை: கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 50 நாட்கள் காஷ்மீரில் நடைபெற்றது. பின்னர் சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தின் தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் விஜய் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆரம்பத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய போது விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் தங்களது காப்புகளை ஒன்றோடு ஒன்று மோதுவது போல வெளியிட்ட புகைப்படம் டிரெண்டான நிலையில், தற்போது படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகும் இருவரும் அதேபோல் இருக்கும் மற்றொரு புதிய புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

‘விஜய் அவர்களின் ‘லியோ’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. உங்களோடு இரண்டாவது முறை இணைய வாய்ப்பளித்ததற்கு நன்றி.. மீண்டும் ஸ்பெஷல் அண்ணா’ எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். அதேபோல் தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி இருவரும் விஜயோடு இருக்கும் புகைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘மிஷன் சக்சஸ்ஃபுல்லா முடிஞ்சு, அக்டோபர் 19 கொண்டாடி கொளுத்த ரெடியாகிக்கோங்க நண்பா… ‘லியோ’வில் விஜய்யின் படப்பிடிப்பு நிறைவடைந்தது’ என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர்.

The post லியோ ஷூட்டிங்கை முடித்தார் விஜய் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: