இந்நிலையில், கடந்த வாரம் பிரபுதேவா, ஹிமானி சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த தகவல் மீடியாவில் வெளியானது. இதுகுறித்து எதுவும் பேச விரும்பாமல் அமைதியாக இருந்த பிரபுதேவா, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘ஆமாம், எனது 2வது மனைவியின் மூலம் எனக்கு குழந்தை பிறந்திருப்பது உண்மைதான். நான் 50 வயதில் மீண்டும் தந்தையாகி இருக்கிறேன். இது எனக்கு அதிக மகிழ்ச்சி அளித்துள்ளது. வாழ்க்கையில் மனநிறைவு அடைந்துள்ளேன். தற்போது சினிமாவில் எனது வேலைகளை கணிசமாக குறைத்துவிட்டேன். இதுவரை நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த நான், இனி என் மகள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்க முடிவு செய்துள்ளேன்’ என்றார்.
The post ‘இனி குடும்பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம்’: 50 வயதில் மீண்டும் தந்தையான பிரபுதேவா பேட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.