கிஷன் தாஸ் கூறுகையில், ‘நான் இன்னும் கூட புதுமுகம்தான். அரவிந்த் சீனிவாசன் கதை சொல்லும்போது, ‘முதலில் இருந்தே இப்படத்தை மிகப்பெரிய படமாக ட்ரீட் செய்யலாம்’ என்றார். இப்போதே மோஷன் போஸ்டர், புரமோ வீடியோவுடன் ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் திரைத்துறையில் இருப்பதற்கு காரணம், ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் இயக்குனர் தர்புகா சிவா. அவர் இப்படத்துக்கு இசை அமைப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார். அரவிந்த் சீனிவாசன் கூறுகையில், ‘தயாரிப்பாளர் புகழ் எனக்கு 18 வருடங்களாக நெருங்கிய நண்பர்.
என்னை நம்பி களமிறங்கிய அவருக்கு இது வெற்றிப்படமாக அமையும். இசை அமைப்பாளர் தர்புகா சிவாவிடம் நான்கு ஹிட் பாடல்கள் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக பாடல்களை ஹிட்டாக்கி விடலாம் என்று அவர் சொன்னார். ‘தேஜாவு’ படத்தின் எடிட்டர் இப்படத்திலும் பணியாற்றுகிறார். ‘தேஜாவு’ படத்தை தாண்டி ஒரு நல்ல படைப்பு கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம்’ என்றார்.
The post நான் இன்னும் கூட புதுமுகம்தான்: கிஷன் தாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.