ஆக்ஷன் திரில்லர் கதை கொண்ட இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் 23ம் தேதி திரைக்கு வருகிறது. கார்த்திக் அத்வைத் கூறுகையில், ‘பொது மனிதனாக இருக்கும் விக்ரம் பிரபு, எல்லா ரூல்சையும் தவறாமல் மதிப்பவர். அவருக்கும், தனஞ்ஜெயாவுக்கும் ஏற்படும் பிரச்னைகள் என்ன? அது யாரால், எப்படி ஏற்படுகிறது என்பது கதை. பொதுவாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்துக்காக விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு, தனது செயலில் வெற்றிபெற்றாரா என்பதை படம் சொல்கிறது. தவிர, மீண்டும் விக்ரம் பிரபுவுடன் ஒரு படத்தில் இணைகிறேன். அடுத்து கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிக்கும் படத்தை இயக்குகிறேன்’ என்றார்.
The post விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.