இது குறித்து பேட்டியளித்த திவ்யன்ஷாவிடம் அவர் நடித்த கேரக்டர் பற்றி கேட்டபோது ‘படத்தில் நான் நடித்த கேரக்டர் இயக்குனர் உருவாக்கியது. கேரக்டரின் குணாதிசயம் பற்றி கருத்து சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. இதுபோன்ற சிக்கலான கேள்விகளால் என்னை போன்று வளர்ந்து வரும் நடிகைளை சிக்கலில் மாட்டி விடாதீர்கள்’’ என்றார். மேலும் அவர் கூறியதாவது: எனது தாயார் பாலிவுட் பிரபலங்களின் ஒப்பனை கலைஞர், அவருடன் அடிக்கடி படப்பிடிப்புக்கு சென்றதால் எனக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. முறைப்படி நடிப்பு பயிற்சி மேற்கொண்டேன். என் அம்மா என்னை மேக்அப் கலைஞராக்கத்தான் நினைத்தார். நான்தான் பிடிவாதமாக நடிகை ஆகிவிட்டேன்.
தற்போது தெலுங்கில் நிகில், கார்த்திகேயா ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். தனுசுடன் நடிக்கும் ஆசை இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த பாகுபாடும் இல்லை. நான் ஒரு இந்திய நடிகை என்று அடையாளப்படுத்துப்படுவதையே விரும்புகிறேன். இந்தியாவில் உள்ள எல்லா ஊர்களும் என் சொந்த ஊர்தான். என்றார்.
The post சிக்கலில் மாட்டி விடாதீர்கள்; திவ்யன்ஷா வேண்டுகோள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.