×

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

அண்ணாநகர், ஏப்.27: அமாவாசையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று காலை அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு விசேஷ நாட்களில் பூக்கள் விலை அதிகரித்தும், மற்ற நாட்களில் விலை குறைந்தும் காணப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த சில நாட்களாக விசேஷ மற்றும் பண்டிகை நாட்கள் இல்லாததால் பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.150ல் இருந்து ரூ.300க்கும், ஐஸ் மல்லி ரூ.120ல் இருந்து ரூ.250க்கும், ஜாதிமல்லி, முல்லை ரூ.120ல் இருந்து ரூ.250க்கும், கனகாம்பரம் ரூ.300ல் இருந்து ரூ.500க்கும், அரளி பூ ரூ.50ல் இருந்து ரூ.100க்கும், சாமந்தி ரூ.80ல் இருந்து ரூ.140க்கும், சம்பங்கி ரூ.30ல் இருந்து ரூ.50க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.60ல் இருந்து ரூ.100க்கும், பன்னீர் ரோஸ் ரூ.20ல் இருந்து ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbed market ,Annanagar ,Tamil Nadu ,
× RELATED பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம்...