×

எழும்பூர் நீதிமன்றத்தில் சாட்சியளித்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை,ஏப்.25: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம், மாடசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசெல்வி (44). இவர் நேற்று முன்தினம் எழும்பூர் 14வது நீதிமன்றத்தில், ஒரு மோசடி வழக்கில் சாட்சியம் அளிக்க வந்தார். அப்போது மோசடி வழக்கில் தொடர்புடைய செங்குன்றம் புதுநகர் 1வது தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (43) என்பவர், தன் மீது நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தால் கொலை செய்துவிடுவேன் என் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த ஞானசெல்வி உடனே எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்த ெபண்ணை மிரட்டிய ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post எழும்பூர் நீதிமன்றத்தில் சாட்சியளித்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Egmore court ,Chennai ,Gnanaselvi ,Madasamipuram ,Kulasekaranpattinam ,Thoothukudi district ,Egmore 14th court ,Chengunram Pudunagar 1st Street ,Dinakaran ,
× RELATED ஈரோடு தம்பதி கொலை வழக்கு; கைதான 4 பேருக்கு ஜூன் 2 வரை நீதிமன்றக் காவல்