×

கோத்தகிரியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் ஒற்றை கரடி உலா வந்த சிசிடிவி காட்சி

*பொதுமக்கள் அதிர்ச்சி

கோத்தகிரி : கோத்தகிரியில் இரவு நேரத்தில் ஒற்றை பெரிய கரடி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக குடியிருப்பு பகுதிகள்,தேயிலை தோட்ட பகுதிகளில் உலா வரத்தொடங்குவதோடு மட்டும் அல்லாமல் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வீடுகளை உடைத்து சேதப்படுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இரவு நேரத்தில் கோத்தகிரி பஜார் குடியிருப்பு நிறைந்த பகுதியில் இரவு நேரத்தில் பெரிய ஒற்றை கரடி உலா வந்துள்ளது.

இந்த காட்சி குடியிருப்பு வாசிகள் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை உடனே கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கோத்தகிரியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் ஒற்றை கரடி உலா வந்த சிசிடிவி காட்சி appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Nilgiris ,Dinakaran ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது