திருப்பூர், மார்ச் 25: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 813 மனுக்களை அளித்துள்ளனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதேபோல், தாட்கோ சார்பில் 39 தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு 15,750 ரூபாய் மதிப்பில் வீல் சேர், ஒரு மாற்றுத்திறனாளிக்கு 3,285 ரூபாய் மதிப்பீட்டில் காதொலி கருவியும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மூன்று பயனாளிகளுக்கு 3 இலவச தேய்ப்பு பெட்டிகளையும் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், மகளிர் திட்ட இயக்குனர் சாம் சாந்தகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 813 மனுக்கள் appeared first on Dinakaran.