காரில் ஆடுகளை கடத்திய பெண் உள்பட 5 பேர் கைது

திண்டிவனம், மார்ச் 22: திண்டிவனம் அருகே காரில் ஆடுகளை கடத்திய பெண் உள்பட 5பேர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலா(51) என்பவர் வளர்த்து வந்த 5 ஆடுகளை நேற்று முன்தினம் அதிகாலை 5 பேர் கொண்ட கும்பல் காரில் ஏற்றி கடத்த முயற்சி செய்தனர். அப்போது இதனை கண்டு பாலா கத்தி கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் அந்த காரை சூழ்ந்து மடக்கினர். எனினும் திருட்டு கும்பல் காரை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து ஒலக்கூர் போலீசார் காரை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், ஊமங்கலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மனைவி சரோஜினி தேவி(45), காஞ்சிபுரம் லோகன் மகன் சரத்குமார்(34), தாம்பரம் செல்வகுமார் மகன் வெற்றி(20), சென்னை பொழிச்சலூர் பாஷா மகன் பாரூக்(34), அனகாபுத்தூர் அச்சுதன் மகன் ஜெயக்குமார்(33) ஆகியோர் ஆடுகளை காரில் கடத்த முயன்றது தெரியவந்தது. இந்நிலையில் பாங்கொளத்தூர் பகுதியில் பதுங்கியிருந்த 5பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post காரில் ஆடுகளை கடத்திய பெண் உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: