முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது: முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது என இணையதளத்தில் வெளியாகி இருக்கும் செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். “காலை உணவு திட்டத்தால் மருத்துவமனைக்கு குழந்தைகள் செல்வது குறைந்துள்ளது. கல்வி வாயிலாக தமிழ்நாடு பெண்களுக்கு அதிகாரம் அளித்து, பாலின இடைவெளியை குறைத்துள்ளது. தொலைநோக்குடன் பயனளிக்கக்கூடிய திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

The post முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது: முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: