×

மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

 

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே குதிரைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (50), கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த மாதம் இறந்து விட்ட நிலையில் மன வேதனையில் மோகன் தினமும் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் வீட்டில் இருந்த மோகன், வீட்டின் மாடியில் தூங்கச் சென்றபோது தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். மோகன் மகன் அரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Pallipattu ,Mohan ,Kuthiramedu ,Dinakaran ,
× RELATED மின்கம்பத்தில் பழுது நீக்கிய போது...