- யூனியன் அரசு
- ஸ்ரீலங்கான் ஊராட்சி
- தமிழ்நாடு முஸ்லிம் லீக்
- சென்னை
- வி.எம்.எஸ்.முஸ்தபா
- இலங்கை கடற்படை
- காரைக்கால் மாவட்டம்
- காரைக்கால்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா இன்று வெளியிட்ட அறிக்கை: இலங்கை கடற்படை காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 13 மீனவர்களை துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தது. இதனை கண்டித்து காரைக்கால் மீனவர்கள் ஒரு வாரமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மீனவர்கள் மட்டுமின்றி, ஐஸ் விற்பனையாளர்கள், சுமை தூக்குபவர்கள் என மீன்பிடி தொழில்சார்ந்த பல்லாயிர கணக்கானோர் வாழ்வாதாரம் இன்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அது மட்டுமின்றி நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1 கோடி அளவிற்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், அதற்கு ஒன்றிய அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் தமிழக, புதுச்சேரி மீனவர்களின் கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை. மாற்றந்தாய் மனபான்மையுடன் ஒன்றிய பாஜக அரசு நடந்துகொள்கிறது. துப்பாக்கிச்சூடு, படகு பறிமுதல், மீனவர்கள் கைது குறித்து இலங்கை அரசை ஒன்றிய அரசு கண்டிப்பதோடு இனியும் காலதாழ்த்தாமல் மீனவ சமுதாய மக்களை இலங்கை அரசின் கொடுமையில் இருந்த காக்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
The post மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்; இலங்கை அரசை ஒன்றிய அரசு கண்டிக்க வேண்டும்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.