டெல்லி: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கும்பமேளாவுக்கு அதிகளவில் மக்கள் செல்வதை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். ரயில்வே துறையின் தோல்வியையும், அரசின் உணர்ச்சியற்ற தன்மையையும் மீண்டும் இந்த துயரம் காட்டியுள்ளது என அவர் கூறியுள்ளார்.
The post டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ராகுல்காந்தி இரங்கல் appeared first on Dinakaran.